பாராளுமன்றத்துக்காக உயிரையும் கொடுப்பேன் - சபாநாயகர்




அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை நேசிக்கும் அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடனும் அமைதியாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளும் தரப்பின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.