மட்டக்களப்பு பிராந்திய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் விடுக்கும் அறிவித்தல்

 
(எம்.எஸ்.எம்.சறூக்)

எமது பிராந்தியத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக வடிகான்கள் தோண்டப்படுகின்றன. இதனால் குறித்த இடங்களிலுள்ள குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் சேதத்திற்குள்ளாகி குடிநீரும் தடைப்படுகின்றது.


எனவே வாடிகான்களை தோண்றுவதற்கு முன் உரிய பகுதிக்கு பொறுப்பான தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியை தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைக்கு இணங்க தங்களது பணிகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.