மட்டக்களப்பு ஏறாவூர் வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

மத்திய சுகாதார அமைச்சினால் ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு உடனடியாக செயற்படும் வண்ணம் மருத்துவ நிருவாகத்தில் முதுமாணி பட்டம்பெற்ற வைத்திய அதிகாரி நாகலிங்கம் மயூரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் 07.11.2018 அன்று ஏறாவூர் தள வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், வைத்திய அதிகாரி நாகலிங்கம் மயூரன் அவர்கள் இதற்கு முன்னதாக செங்கலடி ஆதார வைத்தியசாலை மற்றும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைகளில் வைத்திய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளதுடன் மருத்துவ நிருவாக பரீட்சையில் சித்தியடைந்து மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.