மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்



18வது சர்வதேச அபகஸ் போட்டியானது கடந்த 04.11.2018 ஆம் திகதி கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்றது. இதில் 15 மேற்பட்ட உலக நாடுககைச் சேர்ந்த 2000 மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர். இப்போட்டியில் மாணவர்களுக்கான வினாத்தாள் 05 நிமிடங்களுக்காக வழங்கப்பட்டது. இதில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கான சாம்பியன் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. காரைதீவு அபகஸ் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.சபிஸ்கரி மற்றும் அவ்றிட் மற்றும் றீஹா ஆகிய மாணவிகள் சம்பியன்களாக கிண்ணங்களைப் பெற்றனர்

 குறித்து ஒரு அபகஸ் நிலையத்திலிருந்து 03 மாணவர்கள் உலக சாம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டமை சரித்திர சாதனையாகும்.