தாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு



தாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் 5 ஆம் குறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல் ஹபினேஸ் (வயது 70 நாள்) என்ற குழந்தையே நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளது.

குறித்த தாய் தனது இரட்டை குழந்தைகளுக்கு பால் ஊட்டிக்கொண்டிருந்த போது ஒரு குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் பால் சிக்கியுள்ளது.

இதன் பின்னர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் குழந்தை ஏற்கெனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் உடற்கூறாய்வின் பின்னர் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. இரட்டையர்களில் மற்றைய குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.