நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி எச்சரிக்கை!




நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதன் காரணமாக அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகள் அனைத்தையும் எப்போதும் நிலை நிறுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன்.

அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்ற அமர்வினை தள்ளிபோடமாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.