பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கடமைகளை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன இன்று பொறுப்பேற்றார்



மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே புதிய அரசாங்கம் செயற்படுவதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் விருப்பங்களுக்கு அமைய, நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கடமைகளை அவர் இன்று பொறுப்பேற்ற போது இதனைத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் தவறானகொள்கைத்திட்டங்களினால் தேசிய பொருளாதாரத்திற்கு மேல்மாகாணத்திலிருந்து கிடைத்த பங்களிப்பு குறைந்திருந்தது. அவற்றிற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேற்றுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரங்களை மீண்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்குவது அவசியமாகும்.
தேசிய பொருளாதார மற்றும் சமூகவிடயங்களில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டை கட்டியெழுப்புவதே புதிய அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நிகழ்வில் அனுசாசனம் வழங்கிய சங்கைக்குரிய முறுத்தட்டுவே ஆனந்ததேரர்கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.