மட்டக்களப்பு வாகரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உலர் உணவு பொதி வழங்கிலைப்பு



 (கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாகரையில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்த 400 பேருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் த.சுரேஷ் தலைமையில்  உலர் உணவு பெதிகளை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜேர்மணியிலுள்ள அம்மா அமைப்பின் அனுசரனையுடன் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட வாகரை தட்முனை பாடசாலையில் தஞ்சடைந்திருந்தனர்.

இவர்களுக்கு அரிசி ,பருப்பு,  சீனி, கோதுமை மா, உட்பட அத்தியாவசிய பொருட்களாள். அடங்கிய உலர் உணவு பொருட்கள் கொண்ட பொதிகளை கட்சியின் வாகரை அமைப்பாளர் சதீஸ்காந், மாவட்ட செயலாளர் கே. நவநீதன், பொருளாளர்  க.கனசபை (நாதன்) வவுணதீவு அமைப்பாளர் வினோதன் உட்பட கட்சி உறுப்பினபர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்கிவைத்தனர்