இலங்கை செஸ் சம்மேளத்தின் இளைஞர் சம்பியன்சிப் செஸ் போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெற்றது



இலங்கை செஸ் சம்மேளத்தின் "Batticaloa youth championship 2018/2019 நிகழ்வானது முதன்முறையாக Singing fish chess club இனால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த 3,4ம் திகதிகளில சிறப்பாக நடைபெற்று முடிந்தது.




இந்த சுற்றுப்போட்டியில் 230 வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டிகள் 7,9,11,13,15,17 கீழ் திறந்த ஆண்களுக்கான 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், இம்முறைதேசிய இளைஞர் சம்பியன்சிப்பில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.


பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்/வின்சன்ர் மகளிர் பாடசாலையின் அதிபர் திருமதி . சி.சுபாகரன் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வை .எம் .சீ .ஏ பொது செயலாளர்     திரு.ஜெகன்ஜீவராஜ் அவர்களும்,  சிறப்பு அதிதியாக ICBT Campus மட்டக்களப்பு கிளை முகாமையாளர் வி.கஜேந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.