பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் ஒளி விழா

(சித்தா)

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து ஜேசுநாதர் பிறந்த செய்தியை நினைவுகூர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வான ஒளி விழா வெகு விமரிசையாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் ஜெபம், கரோல் கீதம், ஆசியுரை, கலாசார நிகழ்வுகள் எனப் பல்வேறு கலை நிகழ்வுகளும், சொற்பொலிவுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி மெதஸ்டித தேவாலய அருட்பணி A.R.மகேந்திரன், களுவாஞ்சிகுடி பாஸ்டர் AOG திருச்சபை வணக்கத்திற்குரிய N.ஞானயோகி, தேற்றாத்தீவு புனித யூதாதேயு ஆலயம் வண பிதா நிர்மல் சூசைராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.