யாழ்ப்பாணத்திலும் கடும் மழைக்குள் மத்தியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்கள்


இந்துக்களின் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் இன்று(06) தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

தீபத்திருநாளை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி விசேட வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இந்துக்கள் புத்தாடைகள் அணிந்தும் சிறுவர் சிறுமிகள் பட்டாசுகள் வெடித்து தின்பண்டங்கள் பரிமாறி கடும் மழைக்கும் மத்தியில் யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.