(வரதன்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட் வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது.பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைகழக வேந்தர் வைத்திய காலாநிதி வி.விவேகானந்தராஜா கலந்துகொண்டார்.
கௌரவ அதிதியாக மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதிசுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டு மாவட்ட வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ;ட எந்திரி திருமதி.து.தர்மரெட்ணம் அவர்களும் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.அருட்பிரகாசம் அவர்களும் கலந்துகொண்டனர்.
2017ம் ஆண்டில் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிகாட்டிய மாணவிகள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்விற்கு மதகுருமார் பாடசாலை பழைய மாணவிகள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு இங்கு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கௌரவ அதிதியாக மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதிசுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டு மாவட்ட வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ;ட எந்திரி திருமதி.து.தர்மரெட்ணம் அவர்களும் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.அருட்பிரகாசம் அவர்களும் கலந்துகொண்டனர்.
2017ம் ஆண்டில் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிகாட்டிய மாணவிகள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்விற்கு மதகுருமார் பாடசாலை பழைய மாணவிகள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு இங்கு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.