சீரற்ற காலநிலையால் மீனவர்களுக்கு எச்சரிக்கை




சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த காற்றுடனான அடைமழையினால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமைதென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் தாழமுக்கம் ஒன்று உருவாகுவதனாலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

இந் நிலையில் இதனால் தாம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.