இது ஜனநாயகமா? என கண்ணீர்விட்டழுதார் மிளகாய்தூள் தாக்குதலிற்குள்ளான காமினிஜயவிக்கிரம




பாராளுமன்றத்தில் இன்று மகிந்த ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்ட மிளகாய்தூள் தாக்குதலிற்குள்ளான ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம சற்று முன்னர் செய்தியாளர் மாநாட்டில் கண்ணீர்விட்டதுள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் தனக்கு நேர்ந்த அவலத்தை வர்ணித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுமாறும் ஸ்திரமான அரசாங்கத்தை நிலைநாட்டுமாறும் கேட்டுள்ளார்.

அல்லது நீங்கள்( சிறிசேன சபிக்கப்படுவீர்கள் என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் போது காமினிஜெயவிக்கிரம மீது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூளை தூவியமை குறிப்பிடத்தக்கது.