இன்று நடைபெறும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சிறப்புரை ஞாபகார்த்த விழாவுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.


சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு, மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி கலையரங்கில் கோலாகலமாக இடம்பெறவுள்ள சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சிறப்புரை ஞாபகார்த்த விழாவுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

கலைநிகழ்வுகள் சங்கமிக்க, இன்றைய மாணவ சமூகம் அவசியம் பார்க்கவேண்டிய விவேகானந்தரின் சிறப்புத் திரைப்படம் மற்றும் சொற்பொழிவுகளுடன் விழாவானது சிறப்பாக நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜே.நிகஸ்ரின் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி தெ.பிரதீபன் குழுவினரின் பக்தி கானங்கள் மற்றும் கலாநிதி துஸ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஸின் நெறியாள்கையில் அமைந்த நடன ஆற்றுகை என்பனவும் இடம்பெறவுள்ளன.

மேலும், சமுதாய மேம்பாட்டுக்குத் தேவையான விவேகானந்தரின் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்காக காண்சிப்படுத்தப்படவும் உள்ளன.

நிகழ்ச்சி நிரல் கீழே இணைக்கப்பட்டுள்ளது

தகவல்: இராமகிருஷ்ண மிஷன் குருருல பழைய மாணவர்