மட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்



மட்டக்களப்பு சிஹாரா லத்திப்

மட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு,குடிநீர்,மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மழைகாரணமாக கோறளைப்பற்று வாகரைப்பகுதியில் நான்கு இடைத்தங்கல் முகாங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு,குடிநீர்,மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார் .

இம்மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்பற்றி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் இன்றுவரை1996குடும்பங்களைச்சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நான்கு வீதிகளில் நீர்ப்பெருக்கம் பெருகி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.