இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பிரதமர் மஹிந்தவுடன் சந்திப்பு!



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரருமான டில்ஷான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனையில் இணைந்து கொண்டு தமக்கான உறுப்புரிமையை கட்சியின் தலைமையகத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்குவதாக டில்ஷான் தெரிவித்துள்ளார்.