யானை தாக்கி விவசாயி பலி ;




பொத்துவில் தகராம்பளை பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி நூறானிய்யா வீதி, பொத்துவில் - 07 ஐச் சேர்ந்த 56 வயதுடைய அலியார் அபூசாலி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவசாய நடவடிக்கைகளுக்காக சென்றவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.