கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது


(ஏ.எஸ்.எம்.முஜாஹித் , செ.துஜியந்தன் )
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்தியமுகாமிற்குசெல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருகின்றது. அதன் காரணமாக பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். தொடர்ந்தும் மழை பெய்யுமானால் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படையும் நிலையும் ஏற்படலாம்.