ஏறாவூர் இ.போ.ச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்.


-செங்கலடி நிருபர்-
ஏறாவூர் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று(08) புதன்கிழமை  காலையில் இருந்து இக் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் .

இலங்கை போக்குவரத்து உத்தியோகத்தர் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வை வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு  ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னால் குறித்த கவனயீரப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வை வழங்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள 15 இலங்கை போக்குவரத்து சாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.'அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு'இ 'ஏமாற்றாதே ஏமாற்றாதே இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை' போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.