நாடாளுமன்றில் கட்சித்தலைவர்கள் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!



கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 4ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே தற்போது இடம்பெற்று வரும் கட்சித்தலைவர்களுடனான கூட்டத்தில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.