போக்குவரத்து கட்டணங்களை குறைக்க பஸ் சங்கங்கள் இணக்கம்


பஸ் கட்டணங்களை 2 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன டீசல் விலை 7 ரூபாவால் குறைவடந்ததினை முன்னிட்டு நாளை நள்ளிரவு (08) முதல் பஸ் கட்டணங்களை இரண்டு வீதத்தால் குறைப்பதற்கு சங்கங்கள் அறிவித்துள்ளன.
பஸ் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த முடிவுக்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் குறைந்தபட்ச கட்டணமான ரூபா 12 இல்  மாற்றம் மேற்கொள்ளப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ் கட்டணங்கள் இறுதியாக கடந்த செப்டம்பர் மாத எரிபொருள் அதிகரிப்பை அடுத்து, செப்டம்பர் 21ஆம் திகதி 4 வீதத்தால் அதிகரிக்க பட்டிருந்தது.
அதற்கு முன்னர் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே 23 ஆம் திகதி பஸ் கட்டணங்கள் 12.5% இனால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.