பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

  வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிப் பகுதியில்  பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு  சம்பவம் ஓன்று இடம்பெற்றுள்ளது

வைத்தியசாலையிலுள்ள தனது மகளை பார்வையிட்டு விட்டு தும்பங்கேணி சந்தியிலிருந்து நாவற்கேணி வீதீயூடாக களுமுந்தன்வெளிக் கிராமத்திற்குச் நடந்து சென்று கொண்டிருந்து பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இனம் தெரியாத நபர்கள் பாந்து தங்கச் சங்கிலியை இழுத்து அறுத்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

ரீசேட் அணிந்து தலைக் கவசம் அணிந்;திருந்த அந்த இருவரும் குறித்த பெண்ணிடம் அருகில் சென்று தெரியாத ஒருவரின் விலாசம் கேட்டுள்ளனர் அதற்கு பெண் எனக்குத் தெரியாது என்றுள்ளார். பின்னர் பாய்ந்து கழுத்தில் அணிந்திருந்த 2 பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறித்தெடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். இவ்விடையம் தொடர்பில் குறித்த பெண் வெல்லாவெளி பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.