தொலைபேசி வாங்கி கொடுத்து 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் கைது

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த பிரதேசத்திலுள்ள சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் சிறுமி தரம் 10 ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் உரையாடி வந்துள்ளதுடன், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே சிறுமியின் தயாரினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து 19 வயதான குறித்த இளைஞன் நேற்று(திங்கட்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.