மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்


(எஸ்.ராம் )
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான வே.மயில்வாகனம் நியமிக்கபட்டுள்ளார்

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது விஞ்ஞான பீட பட்டதாரிகளில் ஒருவராவார் களுதாவளையை சேர்ந்த   இவர் தேசிய ரீதியில் சிறந்த விளையாட்டு வீரராகவும் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வண்ணக்கராகவும்   பட்டிருப்பு கல்வி வலயம் கல்முனை கல்வி வலயம் என்பவற்றில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி புலத்தில் உள்ளவர்களின்   நன்மதிப்பை பெற்ற கல்வியலாளார் ஆவார்.