கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.







கிழக்கு  மாகாண ஆளுனர் சவால் கிண்ண கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பொகொல்லாகம சவால் கிண்ண கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் கே.கருணாகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் ஆகியோரின் பிரதம பங்குபற்றலுடன் புதன்கிழமை (28) ஆரம்பமானது.


கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் உதவியுடன் இந்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள், விளையாட்டு திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து எட்டு பெண்கள் அணியும் 31 ஆண்கள் அணியும் கலந்து கொண்டுள்ளன.

இவற்றிலிருந்து 4 ஆண்கள் அணிகள், 4 பெண்கள் அணிகளும் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 06ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கு பெறவுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பொகொல்லாகம சவால் கிண்ண கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அம்பாறை மாவட்டத்துக்கான போட்டிகள் இன்றும் நாளையும் அட்டாளைச்சேனைக் கடற்கரையில் நடைபெறவுள்ளது. அதே நேரம், திருகோணமலை மாவட்டத்துக்கான போட்டிககளடிசம்பர் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.