சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு




கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அனைத்துப் பரீட்சார்த்திகளையும் கேட்டுள்ளார்.

பரீட்சை மத்திய நிலையங்களில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த சுட்டிக்காட்டினார்.

பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 23ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.