பல் சமய ஒன்றியம் அங்குராா்ப்பணம்




மட்டக்களப்பு வாழைச்சேனையில் பல்சமயக் குழு அங்குரார்ப்பண நிகழ்வு கரித்தாஸ் எகெட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஞா.அலக்ஸ் ரொபட் அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (8)மாலை நடைபெற்றது.

சமாதானத்தினை மையப்படுத்தியதாக பிரதேசங்கள் தோறும் பல்சமயக் குழுக்களை ஆரம்பித்து வருவதாக அருட்தந்தை தெரிவித்தார்.இலங்கையிலே சமயங்களிடையே சகவாழ்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களிடையே எந்த முரண்பாடுகளும் இடம்பெறாது தொடர்ந்தும் மக்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக இக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இக் குழு சமாதனத்திற்க்காக செயற்படவும் சமாதானம் நிலை பெறவும் வாழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதேசத்தின் பௌத்த,இந்து சமய,இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ மதப் பெரியார்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக அ.வசந்த குமார் செயலாளர் ஏ.எல்.மீராசாகிபு,பொருலாளர்.
ஜி.ஜோய்பிரகாஸ்,உபதலைவர்களாக யூ.எல்.அகமட்,எஸ்.ஜெயசேகர், உப செயலாளர்களாக திருமதி ஏ.அன்ரனிதாஸ் மற்றும் உறுப்பினர்களாக ஏ.ஜெயஜீவன்,செல்வி.எஸ்.றினோசா,க.நடேசன்,ஏ.எஸ்.எம்.சதிக்.ஏ.அவுஸ்ட்கோன்,ஜே.எவ்.காமிலா.திருமதி.வி.அனுஜா,கே.ஜெகதீஸ்வரன்,எ.அமிர்தலிங்கம்,க.ருத்திரன் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.