மாமாங்கம் குறுக்குவீதி பத்து இலட்சம் ரூபா நிதிமூலம் கபரெலிய வேலைத்திட்டத்தின் மூலம் புனரமைப்பு.


-(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட மாமாங்கம் 3ம் குறுக்கு, குறுக்கு வீதியானது மாநகர உறுப்பினர் த.கௌரி அவர்களின் முயற்சியால் கம்பரெலிய வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளர் ஹரிதரன் கிரி அவர்களின் வழிகாட்டலில் புதன்கிழமை(5.12.2018) வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

தொடர்ச்சியாக பெய்யும் அடைமழை காரணமாக வெள்ளநீர் தேங்கி நின்று போக்குவரத்து செய்யமுடியாமல் காணப்பட்டது.இதனால் மாணவர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள்கள்,பொதுமக்கள்,வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் போக்குவரத்து செய்து வந்தார்கள்.இப்பிரச்சனையை கருத்திற்கொண்டு வீதியை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஹரிதரன் கிரி,முன்னால் மாநகர உறுப்பினர் த.தவராசா,மாநகர உறுப்பினர் சி.சுளக்சனா,மாமாங்கம் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.