எதிர்க் கட்சிப் பதவிக்கு குறி வைக்கும் மஹிந்த



பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என சாபாநாயகரிடம் கோருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.



மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கட்சி ரீதியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இனியொரு போதும் ஆட்சி அமைக்காது. எவ்வாறிருப்பினும் நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மை கருதி பலமிக்கதொரு எதிர்கட்சியாக தொடர்ந்தும் செயற்படுவோம். அதற்கு சபாநாயகர் கருஜயசூரிய பக்கசார்பின்றி செயற்படுவதோடு, எமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.