ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட சாதாரண தர மாணவர்களுக்கா நடைபெற்ற கல்வி கருத்தரங்கு நிகழ்வு


திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட  ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு, கண்ணகிபுரம்,  ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற   2018 ஆண்டு  இவ்வருடம் க.பொ.தர  சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு  நிகழ்வானது கடந்த 10.11. 2018 திகதி தொடக்கம் 20.11. 2018 திகதி வரை இக்கருத்தரங்கு  இடம்பெற்றது. 


இக்கருத்தரங்கானது கட்டாய பாடங்களான தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை  அதிகரிக்கும் நோக்குடன் இடம்பெற்றது. இக்கருத்தரங்கு நிகழ்வுக்கு பூரண அனுசரணையினை  பனங்காடு கிராமத்தினை சேர்ந்த தற்போது சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு புண்ணியமூர்த்தி ரவி அவர்கள் வழங்கியுள்ளார் மேலும் இவர் இப்பிரதேசதில் கல்வி பணிகள் மாத்திரம் அன்றி பலவிதமான சமய சமூக பணிகளினையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.