கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்




மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல் மற்றும் உள்வாங்குதல், சமத்துவம் உறுதி படுத்தல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்துக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன.

நிகழ்வில், விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலிருந்து - திருமலை வீதி ஊடாக தன்னாமுனை மியாணி மண்டபத்தை  வந்தடைந்து, அதனை தொடர்ந்து மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது.

சர்வதேச  மாற்றுத்திரனாளிகள் தினத்தினை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திரனாளிகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்  ஒத்துழைப்புடன்;  இந் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.

கிழக்குமாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர்  என்.மதிவண்ணன் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக  கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொலலாகம, திருமதி ரோகித்த போகொல்லாகம, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும்  மத தலைவர்கள் ,சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகள் , சமூக சேவை உத்தியோகத்தர்கள் , அரச அதிகாரிகள் , அரச சார்பற்ற பிரதிநிதிகள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது  மாற்றுத்திரனாளின் உடல் உள திறன்களை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை கலாசார ,  நிகழ்வுகளும், வீதி நாடகம் , ஆசிரியார்காளுக்கான கௌரவிப்பு , பொது சேவைகளில் ஈட்பட்டுள்ள சமூக மாற்றுத்தினாளிகள் விருதுகள் வழங்கி    கௌரவிக்கப்பட்டனர்.