நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைத் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால நாடாளுமன்றம்  ​கலைக்கப்படுவது தொடர்பில், வெ ளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான  தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.



பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர த ஆப்ரு, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஸித் மலலகொட, முர்து பெர்னாண்டோ ஆகிய உயர்நீதிமன்ற நீதியர்சர்கள் 7 பேர் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்பட்டு வந்தது.


குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் இதன் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.