நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!

நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 06 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டே நாட்டின் சகல நீதி மன்றங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டின் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் நாட்டின் சகல நீதி மன்றங்களும் மீண்டும் இயங்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.