கொட்டும் மழையிலும் தமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களிற்கு தமது அஞ்சலியை செலுத்திய பிரித்தானிய ஈழத்தமிழர்கள்

மாவீரர் நாளில், தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த போராளிகள் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்கள்.
27.11.2018 செவ்வாய்க்கிழமை அன்று  ஒக்ஸ்போட்டில் அமைந்த மாவீரர் மயானத்தில்   இடம்பெற்ற மாவீரர் தின  நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது உணர்வை வெளிப்படுத்தினர்

ஊடகப் போராளி இசைப்பிரியாவின் தாயார் சுடர் விளக்கை ஏற்றி வைக்க  நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது அதன்பின்னர் ஒவ்வொரு மாவீரரது கல்லறைக்கும் தீபம் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது .
அதன்பின்னர் பல கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுற்றது