கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு பதவி உயர்வுகள்!


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் அலுவலர்கள் இருவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன,

குறித்த இருவருக்கும் கான்ஸ்டபிள் தரத்தில் இருந்து பொலிஸ் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று (வௌ்ளிக்கிழமை) மட்டக்களப்புக்கு வந்திருந்தனர்
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.


வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன மற்றும் தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் அலுவலர்கள் உயிரிழந்தனர்.