நாட்டு மக்களுக்கு அபிவிருத்திப் பலன்களை பெற்றுக்கொடுப்பதே எமக்குள்ள பணியாகும்

தற்போது நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்தி அபிவிருத்தி பணிகளை மீண்டும் முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு அதன் பலன்களை பெற்றுக்கொடுப்பதே எமக்குள்ள பணியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொண்டோம். அரசியல் யாப்பை அர்த்தப்படுத்தி அதன் மூலம் நாட்டு மக்களின் சுதந்திரத்தை மீண்டும் உறுதி செய்தோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.