மண்டூர் 37 நவகிரி வித்தியாயலத்தில் மாணவர்கள் வரவேற்பும் ஆக்கத் திறன் கண்காட்சியும்.

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் அமைந்துள்ள மட்/பட்/மண்டூர் 37 நவகிரி வித்தியாயலத்தில் தரம் 1 மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பித்தலும். தரம் 3 மாணவர்களின் ஆக்கத் திறன் கண்காட்சியும் அதிபர் திரு. கே. சாந்தலிங்கம் தலைமையில் இன்று (17.01.2019) பாடசாலை ஆரம்பக் கல்விப் பிரிவு ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து விழாவினை மேலும் சிறப்பித்தனர்.
வரவேற்பு நடனம், தனி நடனம், தரம் 1 மாணவர்களை மாலையணிவித்து வரவேற்றல் போன்ற பல்வேறு மகிழ்ச்சிகரமான செயற்பாடுகள் நடைபெற்றன.