(சிவகுமார் )
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் தைப்பொங்கல் பெருவிழா நிகழ்வு முள்ளாமுனையில் தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.ரஞ்சிதமூர்த்தி தலைமயில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
வேளாண்மை அறுவடை , பொங்கல் , மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
பிரதம அதிதியாக - மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார்
சிறப்பு அதிதியாக - மண்முனை மேற்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சண்முகநாதன் , மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் , மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் , தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் , ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த ஹப்புகாமி , திட்ட முகாமைத்துவ தலைவர் யோகவேல் மற்றும் தமிழ் சங்க உறுப்பினர்கள் , பொதுமக்களும் கலந்துகொண்டனர் .