வாழைச்சேனை இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது




மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பகுதியில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இளைஞர் அணிகளுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுளார்.

தாக்குதலுக்கு இலக்கானவரை தாக்குதலில் ஈடுபட்டவர்களே வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு பின்னர் தலைமறைவாகியுள்ளனர். எனினும், தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வாழைச்சேனைப் பொலிஸாரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.