நாட்டை இந்தியாவிடம் அடகுவைக்க தயாரில்லை : ரணில்





இந்தியாவிடம் பாரிய நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றோம் என்பதற்காக இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தையோ, மத்தள விமான நிலையத்தையோ , காங்கேசன்துறை துறைமுகத்தையோ வழங்க தயாராக இல்லை, சார்க் நாடுகளின் நாணய பண்டமாற்றின் ஊடாக இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்கு எவற்றையும் அடகுவைக்கவேண்டிய தேவையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்கள் பரஸ்பர உதவியளித்தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகள் அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதம் முன்னெடுக்க முன்னர் பிரதமர் விசேட உரை இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையற்றிகொண்டிரருந்த நிலையில் விமல் வீரவன்ச எம்.பி, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.