கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டிப் பொங்கல் நிகழ்வு


ஊழவர் திருநாளில் மற்றுமொரு நிகழ்வான பட்டிப் பொங்கள் கிழக்கு பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வு கிழக்கு பல்கலைக் கழக விலங்கு பண்ணையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம்,பதிவாளர் ஏ.பகீரதன்,நிதியாளர் பாரீஸ்,விவசாய பீடாதிபதி கலா நிதி பி.சிவராசா,விலங்கியல் பகுதி தலைவர் கலாநிதி பக்திநாதன், மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இந் நிகழ்வில் பொங்கள் பொங்கியதுடன் கால் நடைகள் சுத்தம் செய்யப்பட்டு மலர் மலை அணிவித்து தீபம் காட்டப்பட்டு ,பழ வகைகள் மற்றும் பிரசாதம் வழங்கி வணக்கம் செலுத்தப்பட்டது.