களுவாஞ்சிகுடியில் தாலிக்கொடி திருடர்களால் பறிப்பு.




(க. விஜயரெத்தினம்)

களுவாஞ்சிகுடியில் பெண்ணிடம் 5 பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடர்களால் அவகரிப்பு.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதானவீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இன்று புதன்கிழமை(9.1.2018) 5.20 மணியளவில் 5 பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.


களுவாஞ்சிகுடி  சேர்ந்தவரின்   தாலிக்கொடியே இவ்வாறு பள்சர் ரக மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் சூட்சுமமான முறையில் திருடப்பட்டுள்ளது.குறித்த பெண் உணவுக்காக இடியப்பத்தை பெற்றுக்கொண்ட வாழியை ஒப்படைத்துவிட்டு திரும்புகையிலேயே வயோதிப்பெண்ணை தள்ளிவிட்டு தாலிக்கொடியை திருடர்கள் அபகரித்துச் சென்றுள்ளார்கள்.


இவ்வாறு நடைபெற்ற திருட்டுச் சம்பம் சீசீரிவி கமராமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.களுவாஞ்சிகுடியில் இதுவரையும் 7திருட்டுச்சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற திருட்டுச்சம்பவத்தின் சுத்திரதாரிகளை கண்டு பிடிக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.