இளம் குடும்பஸ்தர் தூக்கிலிட்டு தற்கொலை




வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் கதிரேசபிள்ளை-நேமிதாஷ் (24) இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்

குறித்த நபர் தனது மனைவியிடம் குழிப்பதற்கு செல்வதாக சென்றதாகவும் சற்று நேரத்தின் பின் அவரின் மனைவி வெளியில் வந்து பார்க்கும் போது வீட்டின் வெளிமண்டபத்தின் வளையில் தூங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் மண்டூர் வைத்தியசாலைக்கு கெர்ண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இவர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடதக்கது.

சம்பவம் பற்றிய மேலதிக விவாரணைகளை வெல்லாவெளி பொலிஷார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.