மட்டக்களப்பு எழுகதிர் அமைப்பின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் வயோதிபர்களுக்கு உடைகள் வழங்கி வைக்கப்பட்டது



மட்டக்களப்பு எழுகதிர் அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு வறுமை கோட்டின்கீழ் வாழும் வயோதிபர்களுக்கான உடைகள் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் எழுகதிர் அமைப்பானது “ ஏழைகளின் வாழ்வின் உதயம் “ எனும் கருப்பொருளின் கீழ் மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு பல வாழ்வாதார உதவி வழங்கி வருகின்றது

இதற்கு அமைய தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட வறிய குடும்ப வயோதிபர்களுக்கு உடைகள் வழங்கி வைக்கப்பட்டது .

நேற்று  நண்பகல் மட்டக்களப்பு பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெ கு .பரமானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற தீபாராதனை பூஜை நிகழ்வினை தொடர்ந்து உடைகள் வழங்கி வைக்கப்பட்டது .

எழுகதிர் அமைப்பின் தலைவர் சதா தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்