சீனக்குடா விமான தளத்தில் கடேட் அதிகாரிகளின் பயிற்சி வெளியேற்ற நிகழ்வு






கதிரவன் திருகோணமலை

இலங்கை விமான படையின் சீனக்குடா பயிற்சி கல்லூரியில்  அதிகாரிகளுக்கான பயிற்சியை பெற்ற கடேட் அதிகாரிகளின் பயிற்சி வெளியேற்ற நிகழ்வு வெள்ளிக்கிழமை 2019.01.11 காலை சீனக்குடா விமான தளத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விமான படை தளதி எயர் மார்ஷல் கபில ஜெயம்தியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற நிகழ்வில் விமான படை பிரதானி எயார் வைஸ் மார்சல் சுமங்கள டயஸ், மற்றும் இராணுவ. கடற்படை ,பொலிஸ் உயர் அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

57வது பயிற்சி நெறியில் 28 ஆண் கடேட் அதிகாரிகளும், 10 வது பயிற்சி நெறியில் 4 பெண் அதிகாரிகளும் 3 வருட கால பயிற்சியை பெற்று வெளியேறினர். இவர்களுடன் 437 விமான படை வீரர்களும், 220 பெண் விமான படை வீராங்கனைகளும் பயிற்சியை நிறைவு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் விமாங்களின் சாகசங்கள். பரசூட் வீரர்களின் சாகசம், வாத்திய குழவினரின் இசைமுழக்கம். உடற்பயிற்சி கண்காட்சி, முகாம் தாக்குதல் ஒத்திகை என்பனவும் இடம் பெற்றது.