கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்

 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (08) செவ்வாய்க் கிழமை மட்டக்களப்பிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததுடன், சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டதாக ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு மத தலைவர்களையும் ஆளுனர் நேரில் சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.