(சுதா, ஞானம்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதிவழியாக காத்தான்குடி பகுதியில் இருந்து வருகைதந்த வேன் வண்டியானது வேக கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் எதிரே வருகைதந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.