பா.மோகனதாஸ்
மட்டக்களப்பு மாவட்டச் செயலக உழவர் விழா போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் நாளை (18) இடம்பெறவுள்ளது.
அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா. உதயகுமார் தலைமையிலான நிகழ்வில், காக்கச்சிவட்டை முத்துமாரியன் ஆலயத்திலிருந்து தமிழர் பாரம்பரிய பண்பாட்டுப் பவனி, வயல் அறுவடை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடல், பாரம்பரிய கலை விளையாட்டு என்பன இடம்பெறவுள்ளது.
மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு.ஸ்ரீகாந்த் வரவேற்புரையினையும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி நிகழ்வுரையினையும் ஆற்றவுள்ளார்.
போரதீவுப்பற்றுடன் மட்டு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும் செயலகங்களின் கிராம மட்ட சமூக விவசாய கால்நடை அமைப்புகளும் இதர அரச நிறுவனங்களும் இதன்போது பங்குகொள்ளவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா. உதயகுமார் தலைமையிலான நிகழ்வில், காக்கச்சிவட்டை முத்துமாரியன் ஆலயத்திலிருந்து தமிழர் பாரம்பரிய பண்பாட்டுப் பவனி, வயல் அறுவடை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடல், பாரம்பரிய கலை விளையாட்டு என்பன இடம்பெறவுள்ளது.
மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு.ஸ்ரீகாந்த் வரவேற்புரையினையும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி நிகழ்வுரையினையும் ஆற்றவுள்ளார்.
போரதீவுப்பற்றுடன் மட்டு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும் செயலகங்களின் கிராம மட்ட சமூக விவசாய கால்நடை அமைப்புகளும் இதர அரச நிறுவனங்களும் இதன்போது பங்குகொள்ளவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.