வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு.


(சா.நடனசபேசன்)
ஆலையடி வேம்புப்பிரதேசத்தில் மிகவும் வசதி குறைந்த வறுமையான மாணவர்களுக்கு கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் ஐரோப்பாக் கிளையின் அனுசரணை மூலம் ஒரு தொகை கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது.
அவ் அமைப்பின் தலைவர் கலாநிதி பொறியியலாளர் எஸ்.கணேஸ்தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  மேலதிக வலயக்கல்விப்பணிப்பாளர் வி.சிறிதரன் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் மீட்புப் பேரவையின்  அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.